மதுரை: “யாருடைய கூடடணிக்காகவும் அதிமுக துடிக்கவில்லை” என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் ரூ.17.95 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாவடி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியது: “திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என்பது சுத்த பொய். அது சூட்கேஸ் கூட்டணி.