யாருக்கு ‘செக்’ வைக்க செந்தில் பாலாஜி அப்படி பேசினார்? - நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவில் பரபரக்கும் விவாதம்!

5 hours ago 3

“நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன்” கடந்த 18-ம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற்ற திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி இப்படி பேசியதை வைத்து நாமக்கல் திமுக வட்டாரத்தில் பெரும் விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.

நாமக்​கல் மாவட்ட திமுக கிழக்​கு, மேற்கு என இரண்​டாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இரண்டு மாவட்​டங்​களி​லும் வரும் 6 தொகு​தி​களை​யும் வென்​றெடுக்​கும் பொறுப்​பில் இருக்​கும் செந்​தில்​பாலாஜி, மேற்கு மாவட்​டத்​துக்கு மட்​டும் தனி கவனம் செலுத்​தப் போவ​தாகச் சொன்​னதன் பின்​னணி​யில் முன்​னாள் அதி​முக அமைச்​சர் தங்​கமணி இருக்​கி​றார் என்று ஒரு தரப்​பும், மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் கே.எஸ்​.மூர்த்​தியை இம்​முறை தெறிக்​க​விட வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் செந்​தில்​பாலாஜி அப்​படிப் பேசி​னார் என்று ஒருதரப்​பும் விவாதம் நடத்​திக் கொண்​டிருக்​கின்​றன.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய நாமக்​கல் மேற்கு மாவட்ட திமுக-​வினர் சிலர், “மேற்கு மாவட்​டச் செய​லா​ள​ரான மூர்த்தி 2016-ல் பரமத்தி வேலூர் தொகு​தி​யில் நின்று வென்​றார். அப்​போது மாவட்​டத்​தின் ஒரே திமுக எம்​எல்ஏ அவர் மட்​டும் தான். அதை வாய்ப்​பாக பயன்​படுத்தி அதி​முக அமைச்​சர் தங்​கமணி​யுடன் நட்பு பாராட்​டி​னார். இருந்த போதும் 2021-லும் அவருக்கு தலைமை சீட் கொடுத்​தது. ஆனால், இம்​முறை அவரால் வெல்​ல​முடிய​வில்​லை. மேற்கு மாவட்​டத்​தில் வரும் குமார​பாளை​யத்​தில் தங்​கமணி மீண்​டும் வெற்​றி​பெற்​றார். திருச்​செங்கோட்​டில் மட்​டும் திமுக கூட்​டணி கட்​சி​யான கொமதேக நூலிழை​யில் வெற்​றி​பெற்​றது.

Read Entire Article