மோட்டார் சைக்கிளில் கஞ்சாவுடன் சுற்றிய 2 பேர் கைது

4 weeks ago 8

வேளச்சேரி: பெசன்ட் நகர், கலாஷேத்ரா காவல் உதவி மையம் அருகே கஞ்சா கடத்தி வருவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கி சோதனையிட்டனர். அவர்களிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், எடை மிஷின், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், திருவொற்றியூரை சேர்ந்த முஸ்தபா (34), இவர் மீது வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் 7 கஞ்சா வழக்கும், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கிஷோர் (24) என்பதும், அவர் மீது ஒரு கஞ்சா வழக்கும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பெசன்ட் நகர், வேளச்சேரி, தாம்பரத்தில் விற்று வந்ததுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மோட்டார் சைக்கிளில் கஞ்சாவுடன் சுற்றிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article