சென்னை: மோடி ஆட்சி என்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியே தவிர, 146 கோடி மக்களுக்கான ஆட்சி அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூலம் சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், நிர்ப்பந்தத்தின் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாஜகவுடன் எந்த கட்சியும் கூட்டணி சேர முன்வரவில்லை.