மேலூர் கல்லாங்காட்டில் தொல்லியல் ஆய்வு நடத்தக் கோரி கிராம மக்கள் போராட்டம்

1 day ago 4

மதுரை: மேலூர் கல்லாங்காடு பகுதியில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தவேண்டும் என, 18 கிராம மங்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கல்லங்காட்டில் தமிழ்நாடு அரசு சார்பில், 279 ஏக்கரில் சிப்காட் திட்டத்திற்கு எதிராக வஞ்சிநகரம், பூதமங்கலம் கொடுக்கப்பட்டி ஊராட்சிகளைச் சேர்ந்த நாகப்பன் சிவல்பட்டி, நெல்லுக்குண்டுப்பட்டி, கம்பாளிப்பட்டி, மூவன்சிவல் பட்டி, உசிலம்பட்டி, கண்டுவப்பட்டி, தாயம்பட்டி, ஒத்தப்பட்டி , முரவக்கிழவன்பட்டி, சொக்கக்கிழவன்பட்டி, முத்தம்பட்டி, பூதமங்கம், மணியம்பட்டி, நாட்டார்மங்கலம், பெரிய சிவல்பட்டி, தேத்தாம்பட்டி, மாங்குளப்பட்டி, நல்ல சுக்காம்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, மம்மானிப்பட்டி, பொட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிப்காட் அமைக்கவிருக்கும் பகுதியிலுள்ள அழகு நாச்சியம்மன் கோவில் அருகே இன்று திண்டனர். அவர்கள் சிப்காட் தொழிற் பேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read Entire Article