மேயர் பிரியா ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் “தமிழ் மகள்” என்னும் மாபெரும் சொற்போர் நிகழ்ச்சி!

7 hours ago 5
சென்னை: மேயர் பிரியா ராஜன் ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் “தமிழ் மகள்”என்னும் மாபெரும் சொற்போர் நிகழ்ச்சியில்  திராவிட மாடல் ஆட்சியில் பெண்ணின உயர்வுக்காக ஆற்றிய மகத்தான பணிகளை எடுத்துக் கூறுகின்ற வகையில் 30 திட்டங்கள் அடங்கிய அரியப் புகைப்படங்கள் (புகைப்படக் கண்காட்சி) காட்சிப் படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர்  நல்வழிகாட்டுதலின்படி ஏற்பாட்டில் “உலக மகளிர் தின விழா – 2025” முன்னிட்டு, “தமிழ் மகள்” என்னும் மாபெரும் சொற்போர் நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சி  மேயர்  பிரியா ராஜன்  ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் நாளை (18.03.2025), செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கல்லூரி மாணவிகளுக்கிடையே மாபெரும் சொற்போரில் 1,500 மாணவிகள் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் திராவிட மாடல் ஆட்சியில் பெண்ணின உயர்வுக்காக ஆற்றிய மகத்தான பணிகளை எடுத்துக் கூறுகின்ற வகையில் 30 திட்டங்கள் அடங்கிய அரியப் புகைப்படங்கள் (புகைப்படக் கண்காட்சி) காட்சிப் படுத்தப்படுகின்றன.
“தமிழ் மகள்” நிகழ்ச்சியில் பங்கேற்கும் கல்லூரி மாணவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் குறிப்பாக 1.செல்லம்மாள் மகளிர் கல்லூரி “வையத் தலைமைகொள்”, 2.பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “கனவு மெய்ப்பட”, 3.ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி “வல்லினம் – பெண்ணினம்”, 4.லயோலா கல்லூரி “வல்லமை தாராயோ”, 5.அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “சிறகைவிரி எழு பற”, 6.டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி “போர்த்தொழில் பழகு”, 7.ஆர்.கே. நகர் அரசு கலைக் கல்லூரி, “அவள் மலரல்ல”, 8.ஸ்டெல்லா மாரிஸ் மகளிர் கல்லூரி “இலக்கே விளக்கு”, 9.நீதிபதி பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி “கடிகாரம் ஓடும்முன் ஓடு”, 10.எத்திராஜ் மகளிர் கல்லூரி “வானமே எல்லை”, 11.காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி “செயலே அழகு”, 12.இராணி மேரி மகளிர் கல்லூரி “பெரிதினும் பெரிதுகேள்”, 13.செயிண்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “புதிய களம்”, 14.அண்ணா ஆதர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “மண் பயனுற வேண்டும்”, 15.பக்தவச்சலம் மெமோரியல் கல்லூரி “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்”, 16.அன்னை வயலெட் கல்லூரி “எட்டுத் திக்கும் உனக்கானது”,  17.ஸ்கோடா இக்கிதா கல்லூரி “அச்சம் என்பது இல்லையே” மற்றும் 18.கொளத்தூர் அனிதா அச்சிவர்ஸ் அகாடமி “பெண்ணின்றி அமையாது உலகு” ஆகிய  கல்லூரிகளால் அவர்களுக்கு  வழங்கப்பட்ட தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றுபவரை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும், அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் அந்தந்த கல்லூரிகளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் ஏன், எதற்கு, எதனால் என்ற கேள்வி கணைகளோடு எழுப்பி சிறந்ததோர் சொற்போர் நடைபெறுகிறது.
இச்சொற்போரில் நடுவர்களாக மேனாள் நீதியரசர் செல்வி கே.பி.கே. வாசுகி அவர்கள், மேனாள் நீதியரசர் திருமதி. எஸ். ஆனந்தி அவர்கள், இஸ்ரோ விஞ்ஞானி கே.தேன்மொழி செல்வி அவர்கள் ஆகியோரும், இத்தமிழ் மகள் சொற்போரில் பங்கேற்று சிறப்பித்த மாணவிகளை மேனாள் நீதி அரசர் டாக்டர் எஸ் விமலா அவர்கள், சொற்பொழிவாளர் முனைவர் பாரதி பாஸ்கர் அவர்கள், Femi9 நிறுவனர் டாக்டர் கோமதி அவர்கள் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றுகிறார்கள். “தமிழ் மகள்” சொற்போரில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு  முதல் பரிசு ரூ.1,00,000/-, இரண்டாம் பரிசு ரூ.75,000/-, மூன்றாம் பரிசாக ரூ.50,000/- வழங்கப்படுகிறது. மேலும் பங்கேற்ற மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
இச்சிறப்புமிகுந்த விழாவில் நகரமைப்பு குழு உறுப்பினர் திருமதி.ராஜேஸ்வரி ஸ்ரீதர் அவர்கள் வரவேற்புரையில், 6வது மண்டல குழு தலைவர் திருமதி.சரிதா மகேஷ் குமார் முன்னிலையில், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி. சுதா தீனதயாளன், டாக்டர்.ஜி.சாந்தகுமாரி, திருமதி.சர்வஜெயா தாஸ், திருமதி.ஜி.வி.நாகவள்ளி, திருமதி. கே.சாரதா, திருமதி.டி.யோகபிரியா, திருமதி.எம்.தாவுத்பீ, திருமதி.பி.அமுதா, திருமதி.சி.ஸ்ரீதணி, திருமதி. லதா வாசு, திருமதி.எஸ்.தனலட்சுமி, திருமதி.ஆ.பிரியதர்ஷினி, திருமதி.மோ.பானுபிரியா, திருமதி. உஷா நாகராஜ், டாக்டர்.பு.பூர்ணிமா, திருமதி.கே.பொற்கொடி, திருமதி.எஸ்.உமா, திருமதி. பாத்திமா முசாபர், திருமதி.பி.சுமதி,  திருமதி.எல்.ரமணி. திருமதி.ச.தமிழ்ச்செல்வி, திருமதி.ரத்னா லோகேஸ்வரன், திருமதி. ஹேமலதா கணபதி, திருமதி.கே ராணி, திருமதி.ச.பாரதி, திருமதி.ஏ.கமலா செழியன், திருமதி. எலிசபெத் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இவ்விழாவில்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பரந்தாமன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.ரவிச்சந்திரன், கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் திரு.தமிழன்  பிரசன்னா, பகுதி கழக  செயலாளர்கள் திரு.வி.சுதாகர், திரு.சொ. வேலு, கழக அயலக அணி துணைச் செயலாளர் திரு.பரிதி இளம் சுருதி, வட்டச் செயலாளர் திரு.வி.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். இந்த விழாவில் சுகாதார நிலைக்குழு உறுப்பினர் திருமதி.புனிதவதி எத்திராஜன் நன்றி கூறுகிறார்.

The post மேயர் பிரியா ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் “தமிழ் மகள்” என்னும் மாபெரும் சொற்போர் நிகழ்ச்சி! appeared first on Dinakaran.

Read Entire Article