மேட்டூர் அனல்மின் நிலைய கொதிகலன் குழாய் வெடிப்பு மின் உற்பத்தி நிறுத்தம்

2 months ago 15

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது. இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், 2வது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் நேற்று வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. குழாயில் ஏற்பட்ட வெடிப்பை சரிசெய்யும் பணியை மின்வாரிய பொறியாளர்கள் முடுக்கி விட்டுள்ளனர். கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்ட பின்பே மீண்டும் மின் உற்பத்தி துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மேட்டூர் அனல்மின் நிலைய கொதிகலன் குழாய் வெடிப்பு மின் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article