மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் - அன்னூர் - அவிநாசி சாலை, மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்தில் இருவழிச்சாலையாக உள்ளது. இச்சாலையில், தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் உதகை உள்ளிட்ட பகுதிகளை நோக்கி வரும் வாகனங்கள், கோவை நகருக்குள் வந்து செல்லாமல், மேற்கண்ட வழித்தடம் வழியாக விரைவாக சென்று வருகின்றன.