சென்னை: மேகேதாட்டு அணை திட்டத்தை கைவிடும் வரை, கர்நாடக அரசுடன் எந்தவிதமான உறவையும் தமிழக அரசு வைத்து கொள்ளக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகேதாட்டு அணை கட்டி முடிக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார்.