மெரினாவில் வெப்பம் அதிகமாக இருக்கும்: எல்.முருகன் பேட்டி

4 months ago 27

நெல்லை: நெல்லையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:- மெரினா கடற்கரையில் இயல்பாகவே வெப்பம் அதிகமாக இருக்கும். அங்கு விமான தின கொண்டாட்டத்தின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கதாகும்.

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். அங்கு மக்கள் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன்முறையாக 75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் தற்போது வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post மெரினாவில் வெப்பம் அதிகமாக இருக்கும்: எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article