மெரினாவில் போலீஸாருடன் தகராறு செய்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

2 months ago 14

சென்னை: மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் போலீஸாருடன் தகராறு செய்த நபர் மற்றும் அவரது தோழியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார் எடுக்கும்படி கூறியுள்ளனர். இதி்ல் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த காரில் வந்த வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி ஆகிய இருவரும் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

Read Entire Article