மூவாயிரத்தை வைத்து என்ன செய்வது? - கஷ்ட ஜீவனத்தில் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்கள்!

1 week ago 4

“மொழிப்போர் தியாகிகளின் புகழ் ஓங்கட்டும்” என்று இந்த ஆண்டு மொழிப்போர் தியாகிகள் தினத்தில் ஒங்கிச் சொல்லி இருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின். ஆனால் மொழிப்போர் தியாகிகளை ஆண்டு தவறாமல் நினைவுகூரும் அரசு, அவர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன அந்தத் தியாகிகளின் குடும்பங்கள்.

மொழிப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை போற்றும் விதமாக தமிழகத்தில் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. திமுக, அதிமுக, மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் மொழிப்போர் தியாகிகளை மறக்காமல் போற்றி வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிராக போராடி சிறை சென்ற தாளமுத்துவும், நடராஜனும் சிறையிலேயே உயிரிழந்தவர்கள்.

Read Entire Article