நாமக்கல், மே 16: மோகனூரில், மூதாட்டியை அடித்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த மணப்பள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி தெய்வானை (78). இவரது பேரன் வினோத்பாபு (42). இவர் நேற்று முன்தினம், பாட்டி தெய்வானையிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த வினோத்பாபு, உருட்டை கட்டையால் தெய்வானையை அடித்து கொலை செய்தார். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் வினோத்பாபுவை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post மூதாட்டியை அடித்து கொன்ற பேரன் கைது appeared first on Dinakaran.