மூதாட்டி, மகள் திடீர் மாயம்

4 months ago 17

மதுரை, செல்லூரில் உள்ள தியாகி பாலு 2வது தெருவைச் சேர்ந்தவர் கீதா (47). டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லப்பாண்டி (29) என்ற மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கீதா தனது டெய்லர் கடையை மேம்படுத்தவும், மகளுக்கு திருமணம் முடிக்கவும் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன்காரர்கள் நெருக்கடி கொடுக்கவே, கீதா தனது தாயார் பிரேமாவதியை (65) அழைத்துக் கொண்டு மாயமானார். இதையடுத்து தாய், பாட்டி ஆகியோர் மாயமானது குறித்து, செல்லப்பாண்டி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

The post மூதாட்டி, மகள் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article