உத்தமபாளையம், ஏப். 4: உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி அல்லாஹ் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயன்(28). இவர் உடற்பயிற்சி நிலையத்தில் ஜிம் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அனுமந்தன் பட்டியிலுள்ள தனது தாயாரிடம் தனது உறவினர் வீடு உள்ள அணைப்பட்டிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ராயப்பன்பட்டி – அணைப்பட்டி இடையே உள்ள முல்லையாற்றில் கன்னிமார் கோவில் அருகே இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடப்பதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முல்லையாற்றில் வாலிபர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.