மதுரை: “முருக பக்தராக மதுரைக்கு வருகை தரும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை திமுக ஆதரிக்க வேண்டும்,” என நடிகை கஸ்தூரி கூறினார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த நடிகை கஸ்தூரி, மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (ஜூன் 22) வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “மதுரையில் நடக்கும் மாநாடு அரசியல் விழா அல்ல. தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் மாநாடு. கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவதெல்லாம் அரசியல் இல்லை. மக்கள் ஒன்று கூடி மாநாடு நடத்தினால் அரசியல் ஆதாயம் தேடுவது என்று அர்த்தமில்லை. மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?