தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

4 hours ago 3

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நீடித்து வரும் காற்றழுத்தம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும் தமிழகத்தில் 25ம் தேதி முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை மற்றும் அதுனுடன் இணைந்த வெப்பச் சலன மழையும் பெய்யும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடல் புதிய காற்று சுழற்சி நீடித்துக் கொண்டு இருக்கிறது.தற்போது திசை மாறத் தொடங்கியுள்ளது.

அரபிக் கடல் பகுதியில் இருந்து தமிழ்நாடு ஊடாக காற்று பயணிக்க உள்ளது. குறிப்பாக 25ம் தேதி முதல் இந்த காற்று கிழக்கு நோக்கி வீசத் தொடங்கும். இதனால் நான்கு நாட்கள் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article