மும்மொழிக் கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

15 hours ago 3

பரமக்குடி, மார்ச் 21: ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தில் மும்மொழி கொள்கையை கொண்டு வரவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் இரு மொழி கொள்கை நடைமுறையில் உள்ள பொழுது, இந்தியை திணிப்பதற்காக மும்மொழி கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வருவதாக தமிழகத்தில் திமுக,அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தாய் தமிழர் கட்சியின் சார்பாக பரமக்குடி அஞ்சல் அலுவலகம் முன்பு மும்மொழி கொள்கையை எதிர்த்து, கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தலைவர் பாண்டியன், இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசே தமிழகத்திற்கு கல்வி நிதி கொடுப்பதை மறுப்பது ஏன். சர்வாதிகாரத்துடன் செயல்படும் மோடி அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர் செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் ஹரி சுதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post மும்மொழிக் கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article