மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியது பாஜக

9 hours ago 2

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 45 கட்சி தலைவர்களையும் சந்தித்து விளக்க உள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தொடங்கி வைத்தார். சமக்கல்வி இணையதளம், சமக்கல்வி பாடல் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டது. பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read Entire Article