மும்பையில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

2 months ago 15

மும்பை: பாங்காக்கில் இருந்து மும்பைக்கு பார்சல் மூலம் விமானத்தில் 12 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது 4 தங்கக் கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.9.69 கோடி என வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தங்கம் கடத்தி வந்ததாக ஷெட்டி, கே.பி.ராய் ஆகியோரை கைது செய்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மும்பையில் 12 கிலோ தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article