சென்னை: மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு மாணவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: “மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரை கள்ளச்சாராய வியாபாரிகள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சமூக விரோத சக்திகளின் இந்த இரட்டை படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.