திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன், தாடேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் அக்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் ஜெகன்மோகன் பேசுகையில்,‘‘ ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லாததால், சட்டமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்திற்குச் சென்றாலும், இல்லாவிட்டாலும் பொதுப் பிரச்னைகளில் போராட வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
பிப்ரவரி 2028ல் திடீர் தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்து வருகிறது. எனவே தேர்தலுக்குத் தயாராக வேண்டும். ஏழைகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளை அரசாங்கம் திரும்பப் பெற முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் எங்காவது நடந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நிற்க வேண்டும் என்றார்.
The post ஜெகனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கும் வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை புறக்கணிப்பு appeared first on Dinakaran.