
கான்பெரா,
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் மெல்போர்ன் நகரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் ஆசிரியையாக எலினோர் லூயிஸ் (வயது 34) என்பவர் 2017-ம் ஆண்டு சேர்ந்தார். அப்போது தனது வகுப்பில் உள்ள ஒரு மாணவனுடன் அவர் நன்கு பழகி வந்துள்ளார்.
இந்த பழக்கம் அவன் தனது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் ஆன்லைன் மூலம் தினமும் அவர்கள் பேசி மேலும் நெருக்கமாகினர். இதனையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வர இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.