முத்துப்பேட்டை, ஜன.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றியச்செயலர் உமேஷ் பாபு தலைமை வகித்தார். மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரும் முன்னாள்சட் டமன்ற உறுப்பினரும் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான கோ.பழனிச்சாமி, நாகை எம்பி செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், உலகநாதன் விவசாய சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர், ஏஐடியூசி மாவட்ட செயலர் சந்திரசேகர ஆசாத், முன்னாள் விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையன் ஊராட்சி ஒன்றியகுழு துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டனர்.
The post முத்துப்பேட்டை அருகே இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.