முதுநிலை ஆசிரியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

1 hour ago 4

சென்னை: அரசுப் பள்ளிகளில் அரசாணை 105-ன் கீழ் பணிபுரியும் 107 முதுநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் 107 முதுநிலை ஆசிரியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்பின் கடந்த 4 மாதங்களாக அரசாணை 105-க்கு கொடுப்பாணை அளிக்கப்படாததால் 107 முதுநிலை ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article