ஓர­ணி­யில் தமிழ்­நாடு திட்­டத்தை பட்­டி­தொட்டி எங்­கும் சேர்ப்­போம்; அடி­மை­கள்-பாசிஸ்­டு­க­ளின் கூட்டணியை வீழ்த்துவோம்: துணை முத­ல்வர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு

5 hours ago 2

சென்னை: ஓர­ணி­யில் தமிழ்­நாடு திட்­டத்தை பட்­டி­தொட்டி எங்­கும் சேர்ப்­போம். அடி­மை­கள்-பாசிஸ்­டு­க­ளின் கூட்­ட­ணியை வீழ்த்­து­வோம். ஓர­ணி­யில் தமிழ்­நாடு வெல்­லட்­டும் என்று துணை முத­ல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்­னை­யில் திமுக தலை­வரும் முத­ல்வருமான மு.க.ஸ்டாலின் தலை­மை­யில், `ஓர­ணி­யில் தமிழ்நாடு உறுப்­பி­னர் முன்­னெ­டுப்பு மற்­றும் பரப்­புரை பய­ணம்’ தொடர்­பாக, காணொ­லிக் காட்சி வாயி­லாக நடை­பெற்ற ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் திமுக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ர் துணை முத­ல்வர் உத­ய­நிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்­நாட்­டின் சுய­ம­ரி­யா­தை­யைக் காக்க தலை­வர் மு.க.ஸ்டாலின் வரும் 1ம் தேதி தொடங்கி வைக்­க­வுள்ள ஓர­ணி­யில் தமிழ்­நாடு திட்­டத்தை பட்­டி­தொட்டி எங்­கும் சேர்ப்­போம். அடி­மை­கள்-பாசிஸ்­டு­க­ளின் கூட்டணியை வீழ்த்­து­வோம். ஓர­ணி­யில் தமிழ்­நாடு வெல்­லட்­டும். வரு­கின்ற சட்­ட­மன்­ற தேர்­தல், நமக்கு மிக மிக முக்­கி­ய­மான தேர்­தல். பாசிச பாஜக அர­சு­டன் இந்தியாவிலேயே கருத்­தி­யல் ரீதி­யாக போட்டி போடக்­கூ­டிய ஒரே இயக்­கம் திமுக. ஒரே தலை­வர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் என்­பதை நீங்­கள் அனை­வ­ரும் அறி­வீர்­கள்.

அதன் கார­ண­மா­கத்­தான் நம் திரா­விட மாடல் அரசை எப்­ப­டி­யா­வது வீழ்த்தி விட வேண்­டும் என்று, பாசிச பாஜக அரசு துடித்­து கொண்­டி­ருக்­கி­றது. அதற்­கா­கத்­தான் எதிர்க்­கட்­சி­களை எல்­லாம் தொடர்ந்து மிரட்டி மிரட்டி அவர்­க­ளின் அணி­க­ளில் சேர்த்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். நீங்­கள் எல்­லாம் தொடர்ந்து தொலைக்­காட்­சி­க­ளில் ஊட­கங்­க­ளில் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். குறிப்­பாக நம் எதிர்க்­கட்சி அதிமுக-வை எடுத்­துக் கொள்­ளுங்­கள். நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் போது அவர்­கள் என்ன சொன்­னார்­கள். பாசிச பாஜகவுடன் இனி எதிர்­கா­லத்­தி­லும் கூட்­டணி கிடை­யாது என்று சொன்­னார்­கள். ஆனால், இப்­போது என்ன நடந்­து­ கொண்­டி­ருக்­கி­றது. இப்­படி நம்மை எதிர்க்க எந்த எல்­லைக்­கும் செல்ல பாசிச பாஜக துணிந்து இருக்­கி­றது. ஏனென்­றால், நாம்­ தான் பாசிச பாஜகவிற்கு கருத்­தி­யல் ரீதி­யாக உண்மையான எதிரி. நம்மை எதிர்­கொள்­ளவே முடி­யா­மல் திண­று­கி­றது பாஜக. அதற்­குக் கார­ணம் நம் தலைவர் தான்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்­டாம் கட்ட திட்­டத்­திற்கு நிதி­யைக் கொடுக்­கா­மல், எவ்­வ­ளவு முடி­யுமோ அவ்­வ­ளவு கால­தா­ம­தம் செய்­தார்­கள். ஆனால் அந்­தப் பணி­களை எல்­லாம் நிறுத்­தா­மல் தொடர்­வது நம் தலை­வர், முத­ல்வர் மு.க.ஸ்டாலின், நம் திமுக அரசு.

அதே­போல் மும்­மொ­ழிக் கொள்­கையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னால்­ தான் பள்­ளிக் கல்­வித் துறைக்­கான 2,152 கோடி ரூபாய் நிதி­யைத் தரு­வோம் என்று ஒன்­றிய பாசிச பா.ஜ.க. அரசு சொன்­னது. நீங்­கள் 2,000 கோடி ரூபாய் இல்லை பத்தாயி­ரம் கோடி ரூபாய் கொடுத்­தா­லும் உங்­க­ளின் மும்­மொ­ழிக் கொள்­கையை நாங்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம் என்று சொல்­லி­விட்­டார் நம் முத­ல்வர். அப்­படி தமிழ்­நாட்­டின் நல­னுக்கு எதி­ராக எந்த ஒரு திட்­டத்­தைக் கொண்டு வந்­தா­லும் அதை உறு­தி­யோடு எதிர்ப்­ப­வர், நம் தலை­வர். தமிழ்­நாட்டு நல­னுக்­காக நாம் கொண்டு வரு­கின்ற திட்­டங்­க­ளுக்கு பாசிச பாஜக அரசு நேர­டி­யா­கவோ அல்­லது ஆளு­நர் மூல­மாக என்ன முட்­டுக்­கட்டை போட்­டா­லும் அதை­யும் தகர்த்து நீதி­மன்­றம் வரை சென்று போராடி திட்­டங்­களை நிறை­வேற்றி வரு­கி­றார் நம் முத­ல்வர்.

அதற்கு திமுக தொண்­டர்­க­ளின் ஆத­ர­வும், நிர்­வா­கி­கள் ஆன உங்­க­ளின் தொடர் செயல்­பா­டு­க­ளும்­ தான் நிச்சயமாக முழு கார­ணம். அத்­த­கைய வலி­மை­மிக்க தொண்­டர்­களை உற்­சா­க­மாக அர­வ­ணைத்­துச் சென்று, மதுரை பொதுக்­கு­ழு­வில் திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின் நமக்கு கொடுத்து இருக்­கின்ற கட்­ட­ளையை நாம் நிறை­வேற்ற வேண்­டும். அதற்கு இளை­ஞர் அணி களத்­தில் உங்­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருக்­கும். திமுக தலை­வர் மு.க.ஸ்டாலினின் தொடர் வெற்­றிக்கு, உங்­கள் அனை­வ­ரின் உழைப்­பும்­தான் கார­ணம். இத்தனை வெற்­றி­க­ளை­யும் விட, வரு­கின்ற சட்­ட­மன்ற தேர்­தல் வெற்றி மிக மிக முக்­கி­ய­மா­னது.

அதற்கு நிர்வாகிகளுக்குள் இருக்­கக்­கூ­டிய சிறு சிறு பிரச்­னை­களை, முரண்­களை எல்­லாம் மறந்து, கருத்து வேறுபாடுகளை எல்­லாம் கடந்து நாம் அனை­வ­ரும் ஓர­ணி­யில் நின்று பணி­யாற்­று­வது அவ­சி­யம். திமுக ஏழாவது முறை­யாக வெற்றி பெற்று, தலை­வர் மு.க.ஸ்டாலின் இரண்­டா­வது முறை­யாக முத­ல்வர் ஆவதே நம் அனை­வ­ரின் ஒரே இலக்கு. அதற்கு நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து பாடு­பட உறுதி ஏற்­போம். ஓர­ணி­யில் தமிழ்­நாடு என்று தலை­வர் சொல்லி இருக்­கின்ற, இந்­தத் திட்­டத்தை வெற்றி பெற வைத்து விட்­டோம் என்றால் அதுவே சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நாம் பாதி வெற்­றியை அடைந்து விட்­டோம் என்­பதை உறுதி செய்ததாகி விடும். எனவே அதை மட்­டுமே மன­தில் கொண்டு, அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து பாடு­பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஓர­ணி­யில் தமிழ்­நாடு திட்­டத்தை பட்­டி­தொட்டி எங்­கும் சேர்ப்­போம்; அடி­மை­கள்-பாசிஸ்­டு­க­ளின் கூட்டணியை வீழ்த்துவோம்: துணை முத­ல்வர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article