முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

3 hours ago 2

சென்னை,

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ் பாடத்திற்கு 216 பேர், ஆங்கிலம்-197, கணிதம்-232, இயற்பியல்-233, வேதியியல்-217, தாவரவியல்-147, விலங்கியல்-131, வணிகவியல்-198, பொருளியல்-169, வரலாறு-68, புவியியல்-15, அரசியல் அறிவியல்-14, கணினி பயிற்றுனர் நிலை 1-57, உடற்கல்வி இயக்குனர் நிலை 1-102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 12-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் உள்ள குறைகளை களைவதற்கு ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் மாதம் 28-ந்தேதி தேர்வு நடைபெறும். அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1, ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண். 02/2025) (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக 10.07.2025 அன்று வெளியிடப்பட்டு, இப்பணியிடங்களுக்கான தேர்வு நாள் 28.09.2025 என அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், அதே நாளில் (28.09.2025) தமிழ்நாடு அரசுப் பணியாளர் Combined Civil Services Examination - II (Group II and II-A Services) தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், மேற்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article