முதியோர், பெற்றோர் பாதுகாப்பு விதிகளை முறைப்படுத்த கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

4 months ago 16

மதுரை: தமிழகத்தில் மூத்த குடிமக்கள், பெற்றோர் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை புதுமாகாலிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “பல மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தனிமையில் உள்ளனர். இதனால் மூத்த குடிமக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளையும், பாதுகாப்பின்மை மற்றும் சமூக விரோதிகளால் பல்வேறு தொந்தரவுகளையும் சந்தித்து வருகின்றனர். மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தனிச்சட்டம் உள்ளது. பின்னர் 2009-ல் தமிழ்நாடு மூத்த குடிமக்கள், பெற்றோர் நலன் மற்றும் பராமரிப்பு விதிகள் கொண்டு வரப்பட்டன.

Read Entire Article