முதியவர் தற்கொலை

4 months ago 13

ஈரோடு,ஜன.5: ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (63). இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்தது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனா காலத்தில் வலது கண் பார்வை பறி போனது. கடந்த சில மாதங்களுக்கு முன் இடது கண் பார்வை நரம்பு கோளாறு ஏற்பட்டது. கண் பார்வை பறிபோன விரக்தியில் இருந்த பழனிசாமி கடந்த 1ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது மனைவி செல்வி,பழனிசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post முதியவர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article