முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் கட்சி நன்றி

3 months ago 13

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் புதிய அரங்கத்தை கட்டி திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, முக்குலத்தோர் புலிப்படை கட்சீி தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி தலைவர் சே. கருணாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பசும்போன் முத்துராமலிங்க தேவர் நினைவை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 30ல் தேவர் ஜெயந்தி விழாவை தமிழ்நாடு அரசு விழாவாக கொண்டாடுகிறது. அவரது நினைவிடம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வந்தது. அது தற்பொழுது தமிழ்நாடு அரசால் நிரந்தர அரங்கமாக மாறியிருப்பது பாராட்டுக்குரியது. ரூ.1.55 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்ட அரங்கத்தை தமிழக முதல்வர் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மக்கள் கோரிக்கையை ஏற்று இவ்வரங்கத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் கட்சி நன்றி appeared first on Dinakaran.

Read Entire Article