முதல்வர் தலைமையில் இன்று 'நீட்' ஆலோசனை கூட்டம்: அதிமுக பங்கேற்காது என பழனிசாமி அறிவிப்பு

1 week ago 2

நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதாக சட்டப்பேரவையில் கடந்த 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழக மக்களின் எண்ணங்களையும் பேரவையின் தீர்மானங்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவே இல்லை. மத்திய அரசு நமது கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை. போராட்டத்தின் அடுத்தக்கட்டத்தில் நாம் எடுக்கவேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்டவல்லூநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும். இதுதொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் வரும் 9-ம் தேதி மாலை நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Read Entire Article