முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி உதயநிதியை துணை முதல்வராக நியமித்ததில் தவறில்லை: முத்தரசன்

4 months ago 28

வேலூர்: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உதயநிதியை துணை முதல்வராக்கியதில் எந்த தவறும் இல்லை” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலங்கள் அமைப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது, கல்வி, தொழில், விவசாய வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட குழு சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (அக்.1) தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஜி.லதா தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

Read Entire Article