தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விதிமுறைகள் செல்லும்: ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு

1 day ago 7

சென்னை: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்த விதிமுறைகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த விதிமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த விளையாட்டுகளை யாரும் விளையாட முடியாதபடி நேர கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு விதிமுறைகளை அமல்படுத்தியது.

Read Entire Article