முதல்வரை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்: பாமகவினர் கைது

3 months ago 18

விழுப்புரம்: தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, வேறு வேலை இல்லாததால் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸூக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தார். மூத்த அரசியல்வாதியான ராமதாஸ் குறித்து இழிவாக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Read Entire Article