பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜ கூட்டணியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் தீவிரமாக யூகங்கள் வகுத்து பணியாற்றி வருகிறது. இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், பீகாரில் மக்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், ‘சிலர் நான் முதல்வராக வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் என்னை அறிய மாட்டீர்கள். நான் 10 முதல்வர்களை உருவாக்க முயற்சித்தேன்.
இன்று நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, என் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த கடின உழைப்பை செய்கிறேன். எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த மக்கள் வேலைக்காக பீகாருக்கு வரும்போது பீகார் வளர்ச்சி அடைந்ததாக நான் கருதுவேன்’ என்றார்.
The post முதல்வராவது என் கனவு அல்ல; பிரசாந்த் கிஷோர் appeared first on Dinakaran.