சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 2024-25ல் தமிழ்நாடு 9.69% வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. மகளிர் உரிமைத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களால் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளன: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.