
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் 515 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது.
அதனால் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் இன்று (சனிக்கிழமை) 520 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.86-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏது மில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.