​முடிந்தால் நீக்கிப் பார்..! - மல்லை சத்யா Vs துரை வைகோ

4 hours ago 2

மதிமுக துணைப் பொதுச்​செய​லாளர் மல்லை சத்யா​வுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தத்தின் உச்சக் கட்டமாக முதன்மைச் செயலாளர் பொறுப்​பிலிருந்து தாமாகவே விலகி இருக்​கிறார் துரை வைகோ. கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) நடைபெறும் நிலையில் துரையின் இந்த முடிவு மதிமுக-வுக்குள் பெரும் புகைச்சலை உண்டாக்கி இருக்​கிறது.

மகனின் இந்த முடிவு தமக்கு அதிர்ச்​சி​யளிப்பதாக தெரிவித்​திருக்​கிறார் மதிமுக பொதுச்​செய​லாளர் வைகோ. ஆனால், இதெல்லாமே மல்லை சத்யாவை வெளியேற்​று​வதற்காக நடக்கும் ஒத்திகை என்கி​றார்கள் நடுநிலையான மதிமுக-​வினர். திமுக-வில் வாரிசு அரசியல் நடப்ப​தாகச் சொல்லி மதிமுக-வை உருவாக்கிய வைகோ, “எக்காலத்​திலும் என் மகனோ, என் தம்பியோ தாயகத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்​க​மாட்​டார்கள். இது எனது அம்மாவின் மீது ஆணை... பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணை” என்று சொன்னார்.

Read Entire Article