மீனவர்கள் வலை பின்னும் பணி தீவிரம்

3 months ago 8

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.7: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மோர்பண்ணை கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் வலைகளை தயார் செய்வதிலும், பழைய மீன்பிடி வலைகளை சீர் செய்யும் பணியிலும் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மோர்ப்பண்ணை கிராமம் முற்றிலும் மீனவர்கள் வசிக்கும் ஒரு மீனவ கிராமம் ஆகும்.

இக்கிராமத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தக் கூடிய வலைகளை புதிதாக பின்னுதல் மற்றும் கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பிய பின்னர் மீன்பிடிக்க பயன்படுத்திய பழைய வலைகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும் தினசரி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஏராளமானவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post மீனவர்கள் வலை பின்னும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article