தொண்டி: தொண்டி அருகே, மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை மீண்டும் கடலில் மீனவர்கள் விட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள பாசிபட்டினத்தை சேர்ந்த மீனவர் விக்னேஸ்வரன், நம்புதாளையைச் சேர்ந்த மீனவர் பழனிச்சாமி. இவர்கள் இருவரும் நேற்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்கள் விரித்த வலையில் அரிய வகை கடல் ஆமை ஒன்று சிக்கியது. அதை பத்திரமாக மீட்டு, மீண்டும் உயிருடன் கடலில் விடுவித்தனர். மீனவர்களின் இச்செயலை மரைன் போலீசார் மற்றும் மீனவளத்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
The post மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை: கடலில் விடுவித்தனர் appeared first on Dinakaran.