மீண்டும் நகரத் தொடங்கியது புயல் சின்னம்..!!

2 months ago 10

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் நகரத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து வருகிறது. முன்னதாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியது. நாகைக்கு 320 கி.மீ. தென்கிழக்கிலும் திரிகோணமலைக்கு 130 கி.மீ. கிழக்கு வடகிழக்கிலும் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு 480 கி.மீ. தெற்கு தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

The post மீண்டும் நகரத் தொடங்கியது புயல் சின்னம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article