மியான்மரில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம்

2 hours ago 2

நய்பிடாவ்: மியான்மரில் இந்திய நேரப்படி நேற்றிரவு 11.31 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.51 டிகிரி வடக்கு அட்ச ரேகையிலும், 96.12 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 2.57 மணியளவில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 3.9 அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

The post மியான்மரில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article