மின்மாற்றி காயில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது

2 months ago 8

 

உளுந்தூர்பேட்டை, பிப். 23: உளுந்தூர்பேட்டையில் மின்மாற்றி காயில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் உழவர்சந்தை அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில் அதில் சென்ற 3 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் நெய்வேலி நாகராஜன் மகன் வெங்கட்ராமன் (45), நெய்வேலி அருகே வடக்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் மகன் சுதாகர் (25), மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் அலெக்சாண்டர் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நெய்வேலி வடக்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் பழனிச்சாமி (47) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள மின் மாற்றியில் உள்ள காயில்களை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதில் பழனிச்சாமி மீது 9 திருட்டு வழக்குகளும், ஒரு போக்சோ வழக்கும் உள்ளது.

போக்சோ வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை முடித்து தற்போது வெளியே வந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்மாற்றி காயில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article