மின்சார ரெயில் சேவை ரத்து; தாம்பரத்தில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

7 months ago 23

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் பஸ் நிலையத்திற்கு 10 பஸ்கள், தியாகராயநகர் பஸ் நிலையத்திற்கு 20 பஸ்கள் மற்றும் பிராட்வே பஸ் நிலையத்திற்கு 20 பஸ்கள் என மொத்தம் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article