மின்கம்பங்களை அகற்றி சாலை விரிவாக்கம் நடக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

5 months ago 15

 

திருப்புத்தூர், ஜன. 3: திருப்புத்தூர் தென்மாபட்டி பகுதியில் மின்கம்பங்களை அகற்றிவிட்டு, சாலை விரிவாக்க பணிகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கண்டரமாணிக்கம் ரோட்டில் பூமாயி அம்மன் கோயில் பகுதியில் இருந்து தஞ்சாவூர் – மானாமதுரை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புத்தூர் நகருக்குள் வரும் இணைப்பு சாலை வரை தென்மாப்பட்டி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக செய்யப்படும் இந்த சாலை விரிவாக்க பணியில் சுமார் ஐந்தரை மீட்டர் அகலம் அளவுள்ள சாலையை 7 மீட்டர் அகலமாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் சாலையின் ஓரங்களில் விரிவாக்கம் செய்யப்படும்போது, சாலை ஓரங்களில் இருக்கும் பல மின்கம்பங்கள் அகற்றப்படாமல் பணிகள் நடக்கிறது. இதனால் விரிவாக்க செய்யப்படும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் விபத்துகளுக்கு உள்ளாகும் என மக்கள் கூறுகின்றனர். எனவே, சாலை விரிவாக்கம் செய்யப்படும் பகுதியில் உள்ள மின்பங்களை அகற்றிவிட்டு சாலையை முறையாக விரிவாக்கம் செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின்கம்பங்களை அகற்றி சாலை விரிவாக்கம் நடக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article