மின் கம்பிகள் திருட்டு

6 months ago 17

 

சிங்கம்புணரி: மேலப்பட்டியில் டிரான்ஸ்பார்மர் உள்ளே இருக்கும் காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள், டிரான்ஸ்பார்மர் மின் இணைப்பைத் துண்டித்து திருடி சென்றுள்ளனர். சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி பகுதியில் மின்விநியோகம் தடைபட்டது. சரி செய்ய சென்ற மின் ஊழியர்கள் மின் கம்பிகள் திருடப்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் மின்சார வாரிய உதவி பொறியாளர் சோலை செல்வி, சிங்கம்புணரி போலீசில் புகார் தெரிவித்தார்.இதில் 90 ஆயிரம் மதிப்பிலான 110 கிலோ காப்பர் கம்பிகள் திருடு போனதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின் கம்பிகள் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article