“மிகக் குறைந்த சதவீதத்தில் டெபாசிட் இழந்துள்ளோம்!” - நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

3 months ago 14

ஈரோடு: “இந்த தேர்தலை பெரியாரா அல்லது பிரபாகரனா என்ற பிரகடனத்துடன் சந்தித்தோம். இதில், பிரபாகரன் வென்றுள்ளார் என்று கருதுகிறேன்” என நாதக வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறியது: “நாம் தமிழர் கட்சிக்கு 24 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தலை விட 14 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி.

Read Entire Article