திருச்சி, மே 5: திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சக்கரவர்த்தி மேற்பார்வையில், எஸ்ஐ திருமலை ராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டு மற்றும் நகை பறிப்பவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மே 3ம் தேதி திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஒருவரை எஸ்ஐ திருமலை ராஜன் பிடித்து விசாரனை மேற்கொண்டார். விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி பகுதியைச் சேர்ந்த ஆல்வின் குமார் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆல்வின் குமார் மீது இருப்புப்பாதை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 4 பவுன் தங்க நகை, 5 செல்போன், மற்றும் ரூ.1,030 பணத்தை பறிமுதல் செய்தனர்.
The post மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன், நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.