மாவட்ட செயலாளரிடம் அறங்காவலர் குழு வாழ்த்து

3 months ago 10

காரிமங்கலம், பிப்.5:காரிமங்கலம் மலைக்குன்றின் மீது உள்ள அபித குஜலாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக கொள்ளுப்பட்டி மாதப்பன், ரமேஷ், ஹரி, சுரேஷ், ஜெயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நடந்த அறங்காவலர் குழு தலைவர் தேர்தலில் கொள்ளுப்பட்டி மாதப்பன் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அறங்காவலர் குழு தலைவர் மாதப்பன் மற்றும் உறுப்பினர்கள் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பனை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, முன்னாள் தலைவர் கௌரி திருக்குமரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post மாவட்ட செயலாளரிடம் அறங்காவலர் குழு வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article