மாவட்ட குத்துச்சண்டை போட்டி சிங்கம்புணரி அரசு பள்ளி மாணவர்கள் 25 பேர் தேர்வு

4 months ago 10

 

சிங்கம்புணரி, ஜன. 3: சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிவகங்கை மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் பல்வேறு எடை பிரிவுகளில் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற இப்போோட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் அஜ்மல் திவ்யன், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முகமது சமீர், முகமது ஆரிப்கான், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சசிகரன் அப்துல் ரசாக் ஆகிய 6 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மேலும், 6 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும் 25 மாணவர்கள் வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், உடற்கல்வி இயக்குநர் முத்து, உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதி, பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post மாவட்ட குத்துச்சண்டை போட்டி சிங்கம்புணரி அரசு பள்ளி மாணவர்கள் 25 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article